
உயிரிழந்தவர் 34 வயதுடையவரெனவும் தெரியவந்துள்ளது.
அம்பாறை - உகண பகுதியில் உள்ள விமானப்படை முகாமில் முன்னெடுக்கப்பட்ட பரசூட் பயிற்சியின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 34 வயதுடைய விமானப்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும் 8 ஆயிரம் அடிக்கு மேல் பரசூட்டில் இருந்து விழும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
8 ஆயிரம் அடி உயரத்தில் இரு பரசூட் வீரர்களும் சிக்கிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.