ஊவா தென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கும் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
$ads={2}
துமிந்த சில்வாவின் விடுதலையை தடுக்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை வெளியாகியிருந்ததையும் அவர் நினைவூட்டினார்.
பெருந்தொகை ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட ஊவா தென்னே சுமன தேரரை விடுதலை செய்ய முடியும் என்றால், துமிந்த சில்வாவையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.