இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு பாணியானது விதிமுறைகளுக்கு உட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அகில தனஞ்சயவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அனுமதி அளிக்கபட்டுள்ளது.
அகில தனஞ்சயவின் பந்து வீச்சு பாணி தொடர்பில் சர்ச்சை வெளியிடப்பட்டிருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கபட்டிருந்தது.
இதனையடுத்து, அகில தனஞ்சயவின் பந்து வீச்சுபாணி தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆராய்ந்த நிலையில், அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.