
கொரோனா தொற்று பரவல் காரணமாக பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, பேலியகொட – கங்கபட கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 90 தோட்ட பிரதேசமே இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
$ads={2}
இந்நிலையில், குறித்த பகுதி இன்று (12) மாலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.