முன்னாள் அமைச்சரின் மகன் ஒருவர் தற்போதைய நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
அலி சப்ரியை நீதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, குறித்த நபரின் தந்தை நீதி அமைச்சராக வருவதற்கான வாய்ப்பைப் உண்டாக்குவதே இதன் நோக்கம் என்பது தெரிய வந்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர சமூக ஊடகங்களில் பிரச்சாரம் நடத்திய நபர்களில் இவரும் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதற்காக அவர் தனது தந்தையின் வழிநடத்தலும் இடம்பெறுவதாக தெரிய வந்துள்ளது.