
காதி நீதிமன்றங்கள் இந்த நாட்டிற்கு தேவையில்லை எனவும் அவை நாட்டுக்கு பொறுத்தமற்றது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
$ads={2}
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
காதி நீதிமன்றங்கள் நாம் உருவாக்கிய ஒன்றல்ல அவை பல காலங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவை.
இதுபோன்ற விடயங்களை திருத்தம் செய்யவே 68 லட்சம் மக்கள் எமக்கு வாக்களித்தனர். பாராளுமன்றில் 3 இல் 2 ஆசங்களை வழங்கினர். நாம் இந்த நாட்டிற்கு பொதுவான ஒரே நீதிமன்ற கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். ஒரே நாட்டிற்கு ஒரே நீதியை உருவாக்க வேண்டும் என கூறினார்.