
சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை மறுநாள் (21) முதல் இலங்கை விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில், சுமார் 50ற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு இலங்கையர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
$ads={2}
தடை விதிக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள் அனைத்தும் கொழும்பு நகருக்கு வெளியே உள்ள பிரதேசங்களில் உள்ள சினமன், டாஜ், ஜெட்விங், சீட்ரஸ், அமாயா உள்ளிட்ட ஹோட்டல் ஆகும்.
உள்நாட்டு மக்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தற்காலிகமாக எடுக்கப்பட்ட முடிவே இதுவாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.