![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIxuXh9FBNTvVNjxECaprx4KFJhhZ3EeIYmHpTgNFwWORhRGY_x3tLfZR5nWa0jHBanltzlvUQkH5OjgWcncfiTmM8VXIri_PPgI7zVqswiH-J5R6L20rhK5iY61gvNuw33877j4YeVOc/s16000/CREDIT-CARD.jpeg.jpg)
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நுகோகொட பகுதியில் வைத்து நேற்று குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களிடம் இருந்து 22 போலி அடையாள அட்டைகள், 18 வங்கி கணக்குப் புத்தகங்கள், 29 இலத்திரனியல் வங்கி அட்டைகள், 12 கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினி மற்றும் 2 இலட்சம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நைஜீரிய பிரஜைகளினால் நாட்டில் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, குறித்த சந்தேக நபர்கள் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இணையத்தளம் மூலம் பண பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுவதுடன், வங்கி கணக்குகளை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.