
இவர்களுள் ஐவர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர்.
ஏனையவர்களுள் கொழும்பு மாவட்டத்தில் 121 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 109 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 23 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் ஐவரும் யாழ் மாவட்டத்தில் 06 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும் பதுளை மாவட்டத்தில் 03 நபர்களும் நேற்று புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
$ads={2}
ஹேகித்தையில் ஒருவரும் களனி பகுதியில் இருவரும் நீர்கொழும்பு பிரதேசத்தில் ஒருவரும் வத்தளை பிரதேசத்தில் ஒருவரும் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 109 பேருள் அடங்குகின்றனர்.
இன்று (06) காலை வரையான காலப் பகுதிக்குள் நாட்டில் 45,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 38,262 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின.
இதனையடுத்து, நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.