
முடியுமென்றால் தம்மை கைது செய்யுமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (07) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
$ads={2}
அசாத் சாலி போன்றவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களை கைது செய்யாமை பொலிஸாரின் குறைபாடாகும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அசாத் சாலி நேற்றைய தினம் இந்த சவாலை விடுத்துள்ளார்.
“என்னை கைது செய்யுமாறு விமல் கோருகின்றார். மரணத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள், முடிந்தால் என்னை கைது செய்யுமாறு விமல் வீரவன்சவிற்கு நான் சவால் விடுகின்றேன்” என அசாத் சாலி கூறியுள்ளார்.