
திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை - ஜின்னா நகர் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று (12) மாலை கரையொதுங்கியது.
வெள்ளை நிறத்தில் கட்டக் கை சட்டை அணிந்துள்ளதாகவும், 45 வயது நபராவார். இருப்பினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
$ads={2}
கரையொதுங்கிய சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.