![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGDqGUn0_7H7VfFDb609WFtE1Jjos4rdQ4rYCATk2yZqiuCX8qER036LjOJfxv4ZBXsrHA2c8tgmLWjaIq0JGGsJhHrsYeOktXebzucUVeUuqmd7yx7voXTCrtj3iCkJtFsW2SjNEcI0g/s16000/DCD9CC37-4EA3-498F-BC2E-6E58FFE528D0.jpeg)
கொரோனா தொற்றுக்கு இலக்கான நான் முழுமையாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். எனக்கு சிகிச்சையளித்த டாக்டர் அனுராத மற்றும் திருமதி ஜயவர்தன, திருமதி ஆதிஹெட்டி, இந்திவரி மற்றும் ஹர்ஷனி உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கு நான் குறிப்பாக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் தங்கியிருந்த ஹிக்கடுவ பிரதேச ஹோட்டல் ஊழியர்கள்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற மிகவும் விரும்புகிறேன்.
நான் தொற்றுக்குள்ளாகியதும் விரைவாக மீள பிரார்த்தித்த மகா சங்கம், குருமார்கள் மற்றும் குருநாகல் மாவட்ட மக்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே காய்ச்சல், சளி, இருமல், சுவை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுய தனிமைப்படுத்தலில் இருந்து விலகி, அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகருக்கு தெரிவியுங்கள். அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம், இந்த நோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கு உள்ளது.
$ads={2}
எதிர்காலத்தில் 60,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது, இவர்கள் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை வழங்குவது எளிதான காரியமாக இருக்காது. இதற்கு ஒரு தீர்வாக, அவர்கள் தங்கள் வீட்டில் ஒரு தனி அறை மற்றும் தனி கழிப்பறை வசதிகள் இருந்தால் அவர்களும் பதினான்கு நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு நான் பரிந்துரைக்கிறேன். பாதிக்கப்பட்ட நபராக எனது உணர்வு என்னவென்றால், இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
எனவே, இறுதியாக, சரியான சிகிச்சையைக் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சமூக தூரத்தை பாதுகாப்போம். முகக் கவசம் அணிவோம். குடிமைப் பொறுப்பை நிறைவேற்றுவோம்.
எனவே, இறுதியாக, சரியான சிகிச்சையைக் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சமூக தூரத்தை பாதுகாப்போம். முகக் கவசம் அணிவோம். குடிமைப் பொறுப்பை நிறைவேற்றுவோம்.