
ஒவ்வாமை உள்ளவர்கள் பைஸர் பயோ என்டெக் (pfizer biontech) கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என பிரித்தானிய மருத்து ஒழுங்குமுறை நிறுவனம் அறிவித்துள்ளது.
தடுப்பூசியை செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார சேவையில் அதிகாரிகள் இருவருக்கு ஒவ்வாமை அறிகுறிகள் இனங்காணப்பட்டமை காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை தி டெலிகிராப் இணையதளம் வெளியிட்டுள்ளது.