
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துணைப் பொருளாக கேகாலை பகுதியை சேர்ந்த தம்மிக பண்டார எனும் நபர் அறிமுகப்படுத்திய கொரோனா எதிர்ப்பு மருந்தை வழங்க சுதேச சுகாதார அமைச்சின் கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகோடி உறுதிப்படுத்தினார்.
மேலும் இந்த மருந்துக்கு ஆயுர்வேத திணைக்களமும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆயுர்வேத திணைக்களத்தின் வல்லுநர்கள் குழு ஒன்று இன்று தம்மிக பண்டாரவின் வீட்டிற்கு சென்று மருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அவதானித்திருந்தது.
$ads={2}
இந்த மருந்தினை சத்துணவு நிரப்பிய உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அரசு ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரசாத் ஹெண்தவிதாரண தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த மருந்துக்காக எழுத்துப்பூர்வ ஒப்புதலினை வழங்கும் ஏற்பாடுகள் நாட்டின் உயர்மட்ட நிபுணர்களின் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது கால தாமதமின்றி செய்யப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.