ஆயுர்வேத வைத்தியரான தம்மிக பண்டார தயாரித்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு மூலிகை மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேகாலையைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரான தம்மிக பண்டார தயாரித்த குறித்த மருந்திற்கு ராஜரட்ட பல்கலைக்கழக நெறிமுறைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
$ads={2}
சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் இன்று (30) இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வாரம், ஆயுர்வேத திணைக்களத்தின் மருந்தியல் பிரிவு தம்மிக பண்டார தயாரித்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.