![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirfxF_crw2NqwLMExH8SbL2Y9bbw5pNAtATLGybHoQtqN_YFtPxlSxLIOiL6ERwyShzDnSLAXADdMfLkMOkqm6iIkMcqmyn5e9OW9Ya6ia48onW8kug4TOLx1K8dz6OiMCwCgnIWgrWdo/s16000/pg01-1.jpg)
கேகாலை தம்மிக்க பண்டார என்பவரினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட கொரோனாவை அழிக்கும் பாணத்தை பருகிய மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
வரக்காபொலை மற்றும் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவன் மற்றும் அவருடைய தாய் உட்பட ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாக வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
$ads={2}
தாம் அந்த பாணத்தை பருகியதாக தொற்றுக்குள்ளானவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் தகவல் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த ஐவரும் தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வரிசையில் பல மணித்தியாலங்கள் நின்றவர்களுக்கும், செல்பவர்களுக்கும் கொரோனா தொற்றுவதற்கான ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
$ads={1}
எதிர்வரும் நாட்களில் அந்த பிரதேசங்களுக்கும் பாரிய ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுகாதார சட்டங்களை மதிக்காமல் போலியான நபர்களின் பின்னால் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.