
இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆகிய தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதனபடி,
10ஆம் திகதி வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்திலும்
14 மற்றும் 14ஆம் திகதிகளில் வவுனியா புதிய சின்னக்குளம் கிராம அரசடிக்குளம் பகுதியிலும்
16ஆம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ஆவது ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான பகுதியிலும்
17ஆம் திகதி வவுனியா அரசடிக்குளம் பகுதியிலும்
18ஆம் திகதி வன்னி இரானு படை முகாம் , வன்னி விமானப்படை முகாம் , விமானப்படை றேடார் பகுதியிலும்
19ஆம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ஆம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலும் , மகாகச்சக்கொடிய கிராமம் ஆகிய இடங்களிலும் மின்தடை அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களில் முன்கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் மின்தடைக்கான தேவையான முன் ஏற்பாடு நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.