மிகவும் துல்லியமாக கொரொனா பரிசோதனைகளை மேற்கொள்ள கருவி ஒன்றை ஜப்பான் கண்டுபிடிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிகவும் துல்லியமாக கொரொனா பரிசோதனைகளை மேற்கொள்ள கருவி ஒன்றை ஜப்பான் கண்டுபிடிப்பு!!

PCR பரிசோதனைகளின் போது தவறான முடிவுகளைக் காட்டும் கொரோனா சோதனை கருவிகள் மூலம் கொரோனா வைரஸ் தாக்கப்படாதவர்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஜப்பான் விஞ்ஞானிகள் மின்சார அயனிகள் உதவியுடன் ஓர் துல்லியத் தன்மை கொண்ட பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியொன்றின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு அதி நவீன பரிசோதனை கருவி கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், கண்ணுக்குத் தெரியாத நுண் துளையில் மின்சாரத்தை பாய்ச்சி அதன் மூலமாக வைரஸ் கூறுகளை கண்டறிந்து துல்லியத்தன்மை வாய்ந்த ஓர் கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிக்க முடியும் என ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சிலிக்கான் நேனோ போர்ஸ் என்கிற சிறு துளைகளில் மின்சாரம் பாய்ச்சப்படும். சிலிக்கான் நைட்ரேட் கலவையால் உருவாக்கப்பட்ட மெல்லிய தகட்டில் இந்த நேனோபோர் எனப்படும் நுண்துளைகள் உள்ளன. எலக்ட்ரோ போரோசிஸ் என்ற முறை மூலமாக சிறு அயனிகளை இந்த துளைகளுக்குள் செலுத்தப்பட வேண்டும். 

பின்னர் கொரோனா வைரஸ் இந்த நேனோபோர்களில் செலுத்தப்படும் போது அயனிகளின் நகர்வை சில துளைகளில் அது கட்டுப்படுத்தும். இதன் மூலமாக செயற்கை நுண்ணறிவின் உதவியோடு கொரோனா வைரஸின் நுண் கூறுகளை அறிய முடியும். கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் அடினோ வைரஸ், இன்ஃப்ளூயன்சா ஏ, பி உள்ளிட்ட வைரஸ்களையும் இந்த முறை மூலமாக ஆய்வு செய்ய முடியும்.

$ads={2}

கொரோனா வைரஸில் புரதம் இருப்பதால் எளிதில் இந்தமுறை மூலமாக அதன் கூறுகளை ஆராய்ச்சி செய்யமுடியும். இதன்மூலமாக நவீன பரிசோதனை கருவியை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.