ஈரான் நாட்டின் அணு இயற்பியலாளர் படுகொலைக்கு கத்தார் கடும் கண்டனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈரான் நாட்டின் அணு இயற்பியலாளர் படுகொலைக்கு கத்தார் கடும் கண்டனம்!

ஈரானிய அணு இயற்பியலாளர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு கத்தார் நாட்டு அரசாங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அத்துடன், இது தெளிவான மனித உரிமை மீறல் என கத்தாரின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஜவாத் ஷரீப் உடன் தொலைபேசியில் உரையாடிய அவர், ஃபக்ரிசாதே உயிரிழப்பு குறிப்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானுக்கு கிழக்குப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ஃபக்ரிசாதே மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஃபக்ரிசாதே, இறுதியாக ஈரானின் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.

$ads={2}

அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான ஈரானிய முயற்சிகளின் சூத்திரதாரி ஃபக்ரிசாதே என மேற்கு நாடுகள் நீண்ட காலமாக சந்தேகிக்கின்றன. ஆனால் ஈரான் அத்தகைய எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடவில்லை என மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.