பல பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்களுக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்களுக்கு கொரோனா தொற்று!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் மஷ்ரபி மொட்டர்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேசசெய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டாக்காவிலுள்ள அவரது இல்லத்தில் சுயதனிமைப்படுத்தலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.


இதனை அவரது இளைய சகோதரர் உறுதிப்படுத்தியுள்ளதாக இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சிலதினங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் நபீஸ் இக்பால் மற்றும் அவரது சகோதரரும் பங்களாதேஷ் அணியின் ஒருநாள்அணித்தலைவருமான தமிம் இக்பால் ஆகியோருக்கும் இதற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நபீஸ்இக்பால் தற்போது சிட்டகொங்கிலுள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.