பிரதமருக்கு கடிதம் ஒன்றுடன் 5 ஆயிரம் அனுப்பி வைத்தவர், இன்று ஜனாதிபதியை சந்தித்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமருக்கு கடிதம் ஒன்றுடன் 5 ஆயிரம் அனுப்பி வைத்தவர், இன்று ஜனாதிபதியை சந்தித்தார்!

மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராம சேவக உறுப்பினர் எஸ்.பி. ஹேவாஹெட்ட (வயது – 86) அண்மையில் அலரி மாளிகைக்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தாள் சகிதம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் குறித்த பணமும் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனை ஹேவாஹெட்ட, இன்று (20) முற்பகல் தமது கைகளினாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

ஒரு மூத்த குடிமகனாக சமூக பொறுப்பை ஏற்று குறித்த பணத்தை அனுப்பி வைத்த ஹேவாஹெட்டவின் தாராள மனப்பான்மையை கௌரவிக்க வேண்டுமென கருதிய பிரதமர், ஹேவாஹெட்டவின் கைகளினாலேயே அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்யுமாறு பிரதமரின் செயலாளர் காமினி செனரத்துக்கு அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளான இன்று மிரிசவெட்டிய புனித பூமியில் இடம் பெற்ற தானம் வழங்கும் நிகழ்வின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில், ஹேவாஹெட்ட குறித்த நிதியை கொவிட்-19 நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இதன்போது, ஹேவாஹெட்ட அவர்களின் குடும்பத்தாரும் பங்குபற்றினர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.