2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை: வெற்றுக்கண்களால் அவதானிக்க வேண்டாமென எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை: வெற்றுக்கண்களால் அவதானிக்க வேண்டாமென எச்சரிக்கை!

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை (21) நிகழவுள்ளது.

இலங்கை மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

நாளை காலை 9.15 மணி முதல் 6 மணித்தியாலங்களுக்கு சூரிய கிரகணம் நீடிக்கும்.

நாளை காலை 10.20 அளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.


காலை 10.24 அளவில் யாழ்ப்பாணத்திலும் காலை 10.34 அளவில் மாத்தறையிலும் அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.

இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.

இந்நிலையில், வெற்றுக்கண்களால் கிரகணத்தை அவதானிக்க வேண்டாமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.