வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவிருப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவிருப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்!

இலங்கைக்குத் வர விரும்பும் அனைத்து இலங்கையர்களையும் ஜூலை இறுதிக்குள் இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம்திட்டமிட்டுள்ளது. இதுவரை சுமார் 12,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் பிரசன்னரனதுங்க தெரிவித்தார்.

அவர்கள் 21 நாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காகஅனுப்பப்பட்டனர்.


நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 95,087 ஆகும். கடந்த 20 ஆம் திகதி மட்டும் 827 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எவரும் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்படவில்லை என்றுசுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரை 20 ஆம் திகதி முதல் எந்தவொரு தொற்றாளர்களும் பதிவாகவில்லை.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இப்போது 1,498 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் 1,950 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 441 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.