பொதுஜன பெரமுனவிலிருந்து கருணா நீக்கப்பட்டாரா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுஜன பெரமுனவிலிருந்து கருணா நீக்கப்பட்டாரா?

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இம்முறை பொதுத் தேர்தலில் தங்கள் கட்சியில் போட்டியிடும்வேட்பாளர் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.


ஒரே இரவில் 2000 இற்கும் அதிகமான இராணுவத்தினரை கொலை செய்தாக கருணா அண்மையில் வெளியிட்ட கருத்து கடும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்கருணா என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும் அந்த கருத்துக்களுக்கு பதிலளித்த கட்சியின் பொது செயலாளர் சாகரகாரியவசம், விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றுமொரு கட்சியில் அம்பாறை தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதாக அவர்குறிப்பிட்டுள்ளார். கருணா தங்கள் கட்சியின் வேட்பாளர் அல்ல என அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் கொள்கைகளுக்கமைய செயற்படுபவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என அவர்குறிப்பிட்டுள்ளார். தேச துரோக நிகழ்ச்சி நிரலை பின்பற்றுபவர்களுடன் தங்கள் கட்சி இணைந்து செயற்படாதென அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.