இலங்கையின் மிகப்பெரிய பூங்கா - தரையாக மாறிய கடல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் மிகப்பெரிய பூங்கா - தரையாக மாறிய கடல்

இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது . காலி முகத்திடல் போன்று மூன்று மடங்கு பெரிய பூங்காவை எதிர்வரும் ஒரிரு மாதங்களில் மக்கள் பாவனைக்கு திறக்குமாறு பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த பூங்கா 35 ஏக்கர் சதுர கிலோ மீற்றர் அளவில் நிர்மாணிப்பு நடவடிக்கைமேற்கொள்ளப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிக்கால் மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பலவிதமான அபூர்வதாவரங்கள் இங்கு நடப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களுடன் ஓய்வு பெற கூடிய வகையிலும் ஈர்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் இந்தபூங்கா அமைக்கப்பட்டு வருகின்றது.


கடலுக்கு மேல் மண்ணிட்டு நிர்மாணிக்கப்படும் இந்த பூங்காவில் அனைத்து விதமான ஓய்வு பெறும் வசதிகளும் உள்ள வகையில்நிர்மாணிக்கப்பட்டுள்ளது . உணவகம், சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு பயணிக்க கூடிய வகையில் இந்த பூங்காநிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடலுக்கு மேல் அனைவரையும் ஈர்க்கும் வகையில்உருவாக்கப்பட்டுள்ள பூங்கா அதிசய நிகழ்வாகும் என பலர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.