ரணிலுக்கு அரசியல் தெரியும், சஜித் இற்கு அரசியல் அவ்வளவு தெரியாது!! எஸ். பி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணிலுக்கு அரசியல் தெரியும், சஜித் இற்கு அரசியல் அவ்வளவு தெரியாது!! எஸ். பி

ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசியல் புரியும் எனவும் , ஹெரிசன் மற்றும் அவரது தலைவரான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு அரசியல்புரியாது எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் ரணில் விக்ரமசிங்க நாட்டின் மத்தியவங்கியின் கொள்ளையை உருவாக்கி, மத்திய வங்கியில் கொள்ளையிட்ட நபர் எனவும் அவர் கூறியுள்ளார்.


கொத்மலை தேர்தல் தொகுதியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குபதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ரணில் என்பவர் நாட்டின் மத்திய வங்கியில் கொள்ளையைஉருவாக்கி நபர். மத்திய வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதன் ஆளுநராக வெளிநாட்டவரை நியமித்து உலகில்எங்கும் நடக்காத வகையில் மத்திய வங்கியில் கொள்ளையிட்ட நபர்.

இதனால் , ரணில் எந்த வகையிலும் எமக்கு சிறந்தவராக இருக்க மாட்டார் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.