மூன்று பெண்கள் உட்பட நால்வர் கடலில் முழ்கி பலி! - சம்பவம் வத்தளையில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று பெண்கள் உட்பட நால்வர் கடலில் முழ்கி பலி! - சம்பவம் வத்தளையில்

வத்தளை திக்கோவிட்ட கடலில் நீராடச் சென்ற நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் . நேற்றையதினம் பிற்பகல் 3 மணியளவில்கடலுக்கு நீராடச் சென்றுள்ள 5 பேர் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார், பொதுமக்கள், சுழியோடிகள்மற்றும் கடற்படையினர் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 3 பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ள நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டு றாகம வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், 14 வயதுடைய சிறுவன், 16 வயதுடைய பெண் உள்ளிட் 20 மற்றும் 30 வயதுடைய பெண்களே இவ்வாறு நீரில் மூழ்கிஉயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபெண்ணும் கலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நால்வரது சடலங்களும் றாகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.