சட்டவிரோதமாக மாடு மற்றும் ஆடு அறுத்தோர் கைது - சம்பவம் யாழில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக மாடு மற்றும் ஆடு அறுத்தோர் கைது - சம்பவம் யாழில்

யாழ். நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக அறுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதாக அப்பகுதி பொது மக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இத்தகவலின் அடிப்படையில் இன்று (20) காலை அங்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் அப்பகுதி பொது மக்களுடன் இணைந்து இறைச்சி இருக்கும் இடத்தினை முற்றுகையிட்டனர்.

இதன் போது 520 கிலோ கிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன், இறைச்சிக்காக அறுப்பதற்கு வெட்ட தயாராக கட்டி வைத்திருந்த 3 மாடுகள், 2 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.