இன்று இதுவரை மூவர் அடையாளம்; கொரோனா தோற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,950 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று இதுவரை மூவர் அடையாளம்; கொரோனா தோற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,950 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 25 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று (19) இரவு 10.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,950 ஆக அதிகரித்துள்ளதோடு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,446 ஆக காணப்படுகின்றது.

குணமடைந்தவர்களில் கடற்படையினர் 08 பேர் உள்ளடங்குகின்றனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 938 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 901 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 756 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டவர் 07 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 696 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,950 பேரில் தற்போது 493 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலும் இதுவரை 1,446 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 43 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.