ஆண்களின் விந்தணுக்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம்! ஆய்வின் அறிக்கை வெளியாகியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆண்களின் விந்தணுக்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம்! ஆய்வின் அறிக்கை வெளியாகியது!

உலகெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 39.5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு சுமார் 2.71 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் உள்ளன.  இதில் மரணமடைந்தோர் எண்ணிக்கையில் பெண்களை விட ஆண்களே பல மடங்கு அதிகமாக உள்ளனர்.

இதற்கு ஆண்களுக்குப் புகை பிடித்தல் உள்ளிட்ட பழக்கங்கள் அதிக அளவில் உள்ளதாகக் கூறப்பட்டது.   இதையொட்டி அமெரிக்காவின் புரோன்க்ஸ் மருத்துவ மையத்தில் பணி புரியும் டாக்டர் அதிதி சாஸ்திரி மும்பையில் காஸ்தூரிபா மருத்துவமனையில் பணி புரியும் தனது தாய் ஜெயந்தி சாஸ்திரி உடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளார்.  இந்த ஆய்வில் மும்பையைச் சேர்ந்த 68 நோயாளிகள் மருத்துவ விவரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வில் ஆண்களின் விந்தணுக்களில் உள்ள புரதத்துக்கும் கொரோனா வைரஸ் அதிக நாட்கள் இருப்பதற்கும் தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கிலோடென்சின் என்னும் இந்த புரதம் நுரையீரலில் உள்ள என்சைம் 2 மற்றும் இதயத்தில் உள்ள ஏஸ்2 ஆகியவற்றிலும் அதிக அளவில் காணப்படுகிறது.

ஆனால் விந்தணுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வெலியில் உள்ளதால்  கொரோனா வைரஸ் நெடுங்காலத்துக்கு அங்கேயே இருக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.   இந்த தாய் மகள் இருவரின் ஆய்வின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களை விடப்  பெண்கள் விரைவில் குணமடைவதற்கான காரணம் என  தெரிய வந்துள்ளது.

பொதுவாக கொரோனாவில் இருந்து பெண்கள் குணமடைவதை விட ஆண்கள் குணமடைய மேலும் இரு தினங்கள் அதிகம் ஆகிறது என்பது ஏற்கனவே தெரிய வந்துள்ளது.   இந்த தாமதத்துக்குக் காரணம் மட்டுமின்றி அதிக அளவில் ஆண்கள் கொரோனாவால் உயிர் இழப்பதற்கும் விந்தணுக்களில் உள்ள புரதமே காரணம்  என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.