பொதுமக்களுக்கான 5,000 ரூபா நிதி இனியும் அரசாங்கத்தால் வழங்க முடியாது! -பவித்ரா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களுக்கான 5,000 ரூபா நிதி இனியும் அரசாங்கத்தால் வழங்க முடியாது! -பவித்ரா

பவித்ரா
கொரோன வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபா என்ற அடிப்படையில் 26 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 53 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா என்ற அடிப்படையில் இது வழங்கப்பட்டது. ஆனால் இனியும் இதனை வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக இரண்டு மாதகாலம் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடு குறித்து வினவியபோதே சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த இரண்டு மாதங்களாக நாடு முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தத் தாக்கமானது அடுத்துவரும் காலங்களில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் 53 இலட்சம் குடும்பங்கள் நிவாரணத் தொகையை பெற்று வருகின்றனர்.

இதுவரையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்பட்ட மொத்தத்தொகை 26 ஆயிரம் மில்லியன் ரூபாய்களாகும். மிகப்பெரிய தொகை இவ்வாறு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இனியும் இதனை வழங்குவதில் நெருக்கடிகள் உள்ளது.

சுமார் 53 இலட்சம் குடும்பங்கள் இவ்வாறு ஐயாயிரம் ரூபா நிவாரணத் தொகையை பெற்று வருகின்றனர். தொடர்ந்தும் இந்த நிவாரணத் தொகையை வழங்குவதால் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளுக்குள் தள்ளப்படும். அரசாங்கம் பாரிய சுமையை சுமந்துகொண்டுள்ளது.

இனியும் இவ்வாறு சுமைகளை அரசாங்கத்தினால் சுமக்க முடியாது. ஆகவே தான் நாட்டில் ஊரடங்கை தளர்க்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மக்களின் அன்றாட செயற்பாடுகள் படிப்படியாக முன்னெடுக்க இடமளிக்கப்படவுள்ளது என்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.