கொரோனா பரவல் – 20 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது குவைத்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரவல் – 20 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது குவைத்!

குவைத்சிட்டி: வளைகுடா பகுதியில் அமைந்த சிறிய நாடான குவைத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 20 நாள் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், வளைகுடா பகுதி முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சவூதி உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, குவைத் அரசின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல் மிஸ்ரிம் கூறியுள்ளதாவது, “குவைத் நாட்டில் இதுவரை 7,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 47 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, இந்தத் தொற்றானது சமூகப் பரவலாக மாறுவதற்கு முன்னர், நாடு முழுவதும் மே 10ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை மொத்தம் 20 நாட்களுக்கு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது” என்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.