துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று! மொத்த எண்ணிக்கை 855 ஆக அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று! மொத்த எண்ணிக்கை 855 ஆக அதிகரிப்பு!

நாட்டில் இன்றைய தினம் (10) மேலும் 8 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த 8 பேரில் இருவர் டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் என்றும் மற்றைய 6 பேர் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 855 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி இதுவரை 525 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

116 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இதுவரை இலங்கையில் 332 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.