12.5 தொன் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

12.5 தொன் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா!

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் இந்தியாவினால் உதவியாக வழங்கப்பட்டுள்ள 12.5 தொன் நிறையுடைய மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பன விசேட விமானமொன்றின் மூலம் இன்றைய தினம் (08) கொழும்பை வந்தடைந்தன.

ஏற்கனவே கடந்த மாதம் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள் மற்றும் கையுறைகள் என்பன மூன்று பகுதிகளாக இந்திய அரசாங்கத்தினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்டன.

இந்த உதவிப்பொருட்களுடனான விமானத்தில் வருகைதந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பங்லே, இலங்கை மக்களுக்கு வெசாக்தின வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன்,இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒருமைப்பாடு என்பன குறித்தும் சுட்டிக்காட்டினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.