இந்தியாவின் கடினமான இலக்கினை துரத்திய அவுஸ்திரேலிய அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவின் கடினமான இலக்கினை துரத்திய அவுஸ்திரேலிய அணி!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா (95) மற்றும் தவான் (143) ஆகியோரின் பெரியதொரு பங்களிப்பில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றது.
கடின இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் வரிசையில் கவாஜா (91) மற்றும் ஹேண்ட்ஸ்கோம் (117) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றி இலக்கை உயர்திக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி, 47.5 ஓவர் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் 359 ஓட்டங்களை பெற்று, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

இந்த வெற்றியினை அடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என ஆஸ்திரேலியா சமப்படுத்தியது.

இரு அணிகளும் மோதும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் 13ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.