இலங்கை அணி மூன்றாவது முறையாகவும் தென் ஆபிரிக்கா அணியுடன் தொடர் தோல்வி !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அணி மூன்றாவது முறையாகவும் தென் ஆபிரிக்கா அணியுடன் தொடர் தோல்வி !!!

தென்னாபிரிக்கா, டர்பன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையேயான  மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 'டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன்' முறையில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென் ஆபிரிக்கா அணி சார்பில் டிகொக் 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் டச்சன் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதனடிப்படையில் இலங்கை அணிக்கு 332 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

பின்னர் 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 193 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும் இலங்கை அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

மேலும் இத்தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டீ20 போட்டிகளை கொண்டிருந்த நிலையில் எஞ்சியிருக்கும் 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டீ20 போட்டிகளில் இலங்கை அணியின் திறனை வெளிப்படுத்துமா?

எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவிருக்கும் அடுத்த ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றிபெற யாழ் செய்திகள் சார்பாக எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.