எரிபொருள் சூத்திரம் நாளை !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் சூத்திரம் நாளை !!!


மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் திருத்தப்பட்ட எரிபொருள் விலை இன்று அறிவிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்காக நாளை ஒன்று கூட உள்ளதாக எரிபொருள் நிரணயிப்பு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் எரிபொருள் விலையிடல் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது கொண்டிருந்தது.

பெப்ரவரி மாதத்தில் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரொன்றின் விலை ரூ.6 இனாலும், 95 பெற்றோல் லீட்டரொன்றின் விலை ரூ .5 இனாலும், ஒட்டோ டீசல் லீட்டரொன்றிற்கு ரூ .4 இனாலும், சூப்பர் டீசல் லிட்டரொன்றிற்கு ரூ .8 ஆகவும் நிதி அமைச்சினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தற்பொழுது வரை எரிபொருள் விலை நான்கு முறைகள் அதிகரித்ததோடு, ஐந்து முறைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்தது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.