புகையிரத நிலையத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த மாத்தளை மாவட்ட நகரத்தலைவர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகையிரத நிலையத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த மாத்தளை மாவட்ட நகரத்தலைவர்

மாத்தளை நகர தலைவர் துல்ஜித் அலுவிகார மாத்தளை புகையிரத நிலையத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, இலங்கை புகையிரத சேவைக்கு சொந்தமான வீதி மற்றும் வேலிகளை சேதமாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதோடு இன்று (10) மாத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் ரூ. 100,000 தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

புகையிரத நிலைய வலாகத்தினை சேதம் விளைவித்தமைக்கு எதிராக புகையிரத பாதுகாப்பு சேவை அதிகாரிகளின் புகாரினை தொடர்ந்து நகர தலைவர் கைது செய்யப்பட்டார்.

மாத்தளை புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி புகையிரத நிலைய சார்பாகவும், சட்டமா அதிபர் சம்பிகா விஜேரத்ன, அஜித் அபேசேகர, அசித வீகொடபிட்டிய, பிரசன்னா சலிய தர்மகீர்த்தி, ஜாலிய குணரத்ன மற்றும் லசந்த பாலசூரிய ஆகியோர் நகர தலைவர் அலுவிகார சார்பில் வாதிட்டனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.