நாட்டை கட்டியெழுப்ப தவறியமை அனைவரினதும் பொறுப்பு - அமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை கட்டியெழுப்ப தவறியமை அனைவரினதும் பொறுப்பு - அமரவீர


நாட்டினை கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும், தான் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று (09) ஹன்காமா நிறுவன திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

71 ஆண்டுகளாக பல்வேறு அரசாங்கங்கள் இருந்த போதிலும் எந்தவொரு பலனும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது இலங்கை பிரஜை ஒருவரின் கடன் ரூ. 417, 175 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சரின் கருத்தாகும்.

இலங்கையானது ஊழல் நிறைந்த நாடாக மாறிவருவதாகவும், சர்வதேச வங்கிக் கடன் வீக்கமடைந்த நாடாகவும் அதி வேகமாக பின்னடைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையிலிருந்து நாட்டை எந்தவொரு அரசியல் ஆதாயமும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.