அமேரிக்கரின் பொதியில் துப்பாக்கி - கட்டுநாயக்க விமான நிலையம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமேரிக்கரின் பொதியில் துப்பாக்கி - கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படுகையில் துப்பாக்கியினை தன்வசம் மறைத்து வைத்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த அமேரிக்க குடியுரிமை பெற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலைய குடியேற்ற முனைய எக்ஸ்ரே ஸ்கேன் (x-ray scan) செய்யும் பொழுதே தனது பொதியினுள் மறைத்து வைத்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

சந்தேக நபர் வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் தனது தாயாரை சந்தித்துவிட்டு நாடு திரும்புகையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட ஆயுதம் போரா-12 (Bora-12) துப்பாக்கி எனவும், சந்தேக நபரின் தந்தையாருக்கு சொந்தமானது எனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.

மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்வதற்காக கட்டுநாயக்க காவல் நிலையத்திற்கு குறித்த துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.