சட்டவிரோத வடிசாராயம் காய்ச்சும் நிலையில் நால்வர் கைது! (படங்கள் இணைப்பு)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோத வடிசாராயம் காய்ச்சும் நிலையில் நால்வர் கைது! (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோத வடிசாராயம் காய்ச்சும் நிலையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (10) கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவில் உள்ள முனைக்காடு மேற்கு ஆற்றங்கரைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணாக் காட்டுப் பகுதியிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

வவுனதீவு விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் வஹாப் தலைமையில் சுற்றி வழைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போது 1,260,000 மில்லி லீற்றர் வடி சாராயம் வடிப்பதற்கு பயன்படுத்தப் படும் கோடா(Goda), மற்றும் 10,000 மில்லி லீற்றர் வடி சாராயம், வடிசாரயம் வடிப்பதற்கு பயன் படுத்தப் பொருட்கள் போன்றன கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது வடிசாராயம் வடித்துக் கொண்டிருந்த நான்கு நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார் ஏனய மூவரும் தப்பி ஓடி விட்டனர்.தப்பி ஓடியவர்களை கொக்கட்டிச்சோலை பொலிஸார் தேடி வருகின்றனர்.




-IP அப்துல் வஹாப்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.