2018 இல் மட்டும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 105,094 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2018 இல் மட்டும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 105,094 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


2018 ஆம் ஆண்டில் மட்டும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 105,094 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களாகும். அதனடிப்படையில் 65819 மோட்டர் சைக்கிள் ஓட்டுனர்கள் குடிப்போதையில் செலுத்தியமைக்காக 2018 இல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று மேல் மாகாணத்தில் மேற்கொண்ட பரிசோதனையின் போது 222 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலின் உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை இன்று நல்லிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

கொழும்பிலிருந்து வெளியேறுகையிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகவியலாளர் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.