மஹிந்தானந்த வெளியிட்ட ”நல்லாட்சியின் 10 பேர்கொண்ட மிகப்பெரிய களவாடிகள்” நூலில் இருப்பது என்ன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹிந்தானந்த வெளியிட்ட ”நல்லாட்சியின் 10 பேர்கொண்ட மிகப்பெரிய களவாடிகள்” நூலில் இருப்பது என்ன?

மஹிந்தானந்த அளுத்கமகே எழுதிய "යහපාලන ටොප් ටෙන් - කම්බ හොරු" என்ற 'நல்லாட்சியின் 10 பேர்கொண்ட மிகப்பெரிய களவாடிகள்' என்ற தலைப்பில் இன்று புத்தகமொன்றினை வெளியிட்டார்.

கூட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இந்தப் புத்தக வெளியீடு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வெளியிடப்பட்ட புத்தகத்தின் முதல் பிரதி கையளிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் பொதுப்பணத்தை கொள்ளையடித்த விதம் மற்றும் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் தொடர்பான விடையங்கள் இதில் அடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டது.

மேலும் கடந்த இரண்டரை வருடங்களாக தற்போதைய அரசாங்கத்தின் போலீஸ் மற்றும் குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு கிடைத்த புகார்களும் இந்த புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தகம் வெளியிடுவதன் முக்கிய நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை சட்டரீதியாக விசாரிப்பதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதுமாகும் என எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.